இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கிய பொலீஸ் உதவி ஆய்வாளர்..! வைரலான வீடியோவால் சர்ச்சை..!
பொலீஸாரால் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகவில் உதவி காவல்துறை ஆய்வாளர் ஒருவரே இளைஞரை இவ்வாறு தாக்கியுள்ளார் . கர்நாடக மாநிலத்தில் சுப்ரமணிய நகர். காவல் நிலையத்தில் இந்த வீடியோ எடுக்கப் பட்டுள்ளது.
தாக்கப் படும் நபரின் பெயர் தஸ்வந்த் குமார் என்றும் இவர் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தொடர்ந்து அவரை பற்றிய புகார் கிடைத்ததால் கைது செய்ததாகவும் உதவி காவல் ஆய்வாளர் ஸ்ரீகண்டே கவுடா தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த ஒரு குற்றவாளியையும் இப்படி தாக்க கூடாது என்றும் அது சட்டத்தில் இல்லை எனவும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஆய்வாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் குறித்த காவல் நிலையத்தில் 40திற்கும் அதிகமான கவலர்கள் பணி புரிகின்ற நிலையில்
காவல் நிலையத்திற்குள் இந்த வீடியோவை யார் எடுத்தது என்ற் ரீதியிலும் விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது.கைது செய்யப் பட்டவர் ஏற்கனவே பல பெண்களிடன் பாலியல் சீண்டல் செய்ததுடன் அவற்றை வீடியோ எடுத்ததாக கிடைத்த புகாரை தொடர்ந்து விசாரணை செய்தபோது பொலீஸாரிடமும் மோசமாக நடந்துகொண்டதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளார்..!!