இறைவழிப்பாட்டின் போது இந்த பொருட்களை வைக்காதீர்கள்..! இது முற்றிலும் தவறான முறையாகும்..!!
ஹாய்…..உறவுகளே இன்றும் இறை நம்பிக்கையுடன் காத்திருக்கும் உங்களுக்கு சூப்பரான சில விடயங்களை பகிர்ந்துகொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி. இன்று இறைவனுக்கு நாம் பூஜை செய்யும் போது எப்படி செய்ய வேண்டும் எந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என சில நேரம் நாம் குழம்பிவிடுவோம். இன்று அவற்றுக்கான தீர்வை பார்க்கலாம் இனி குழப்பம் வேண்டாம்.
“வெற்றிலை” எந்த ஒரு சுப நிகழ்வுக்கும் முன் இருப்பது வெற்றிலை தான். இறை பூஜைக்கு வெற்றிலையை வைக்கும் போது வெற்றிலையின் நுனி பகுதி கண்டிப்பாக இருக்க வேண்டும். நுனியை கிள்ளிவிட்டு பூஜையில் வெற்றிலை வைக்க வேண்டாம்.
வாழைப்பழம் ஹிந்துக்களின் சபைகளில் ராஜா வாழைப்பழம் தான். வாழைப்பழத்தை பூஜையில் வைக்கும் போது காம்புகள் இருக்கவே வேண்டும். காம்பு இல்லாத வாழைப்பழத்தை பூஜையில் வைப்பது தவறு.
வெற்றிலை பாக்கி பூஜையில் வைக்கும் போது எக் காரணத்திற்காகவும் சுண்ணாம்பு வைக்க கூடாது.
மூத்தோன் கணபதியை வழிபடும் போது துளசி இலை வைக்க கூடாது. வாழ்வில் எப்போதும் பிள்ளையாரை துளசி கொண்டு வழிபட வேண்டாம். பெருமாள் கோவில் அல்லது பெருமாள் சாமியை பூஜிக்கும் போது அட்சதை போட்டு பூஜிக்கவே கூடாது. சிவ வழிபாட்டு தளங்களில் தாழம்பூ வைக்க கூடாது.
சிவ வழிபாட்டில் எப்போதும் தாழம்பூவை தள்ளி வைய்யுங்கள். திருமகளுக்கு தும்பை பூ பிடிக்காது.! அம்பிகையை பூஜிக்கும் போது அருகம்புல் சேர்க்க வேண்டாம்.