முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்த நடிகர் பிரபு தேவா..! நயன்தாரா பிரபு தேவா பிரிவுக்கு காரணம் யார்.? இது தான் நடந்ததாம்..!!
ஆசியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப் படுபவர் நடிகர், டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா. பிரபல நடன இயக்குனரின் மகன்களான பிரபு தேவா மற்றும் அவரது அண்ணா, தம்பி அனைவருமே நடனத்தை தேர்தெடுத்தனர். இருப்பினும் பிரபு தேவாவே ரசிகர்களின் நாயகனாக மாறினார். திறமைகள் கொட்டிக் கிடந்தாலும் அடிக்கடி கிசு கிசுகிசுக்களிலும் சிக்கி வந்தார்.
பின் முஸ்லீம் பெண் ஒருவரை காதலித்து வந்த பிரபு தேவா 1995ம் ஆண்டு அவரையே திருமணம் செய்துகொண்டார். ரம்லத் என்கிற பிரபு தேவாவின் முதல் மனைவி தனது கணவருக்காக மதம் மாறினார். அதன் பின் இவரது பெயர் லதாவானது. இந்த ஜோடிக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்த நிலையில் நயன்தாராவுடன் திரைப்படம் ஒன்றில் பணியாற்றினார் பிரபு தேவா.
இதன் பின் இந்த ஜோடிக்குள் காதல் வர மனைவியுடன் முகம் கொடுத்து பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் குடும்பத்தில் பூகம்பம் வெடித்ததது. லதாவிற்கு பிரபு தேவா நயன்தாரா காதல் தெரிய வந்ததை தொடர்ந்து பிரபு தேவா வீட்டில் இருந்து வெளியேறி தனியாக வசித்து வந்தார். மனைவி மற்றும் மகன்களுக்கு தேவையான அனைத்து கடமைகளையும் செய்தார்.
அத்துடன் மனைவியிடம் விவாகரத்து கேட்டார். பிரிந்து சுமார் 5 வருடங்களின் பின் விவாகரத்து கொடுக்க சம்மதித்தார் லதா. விவாகத்து பெற்ற அன்று நயன்தாராவித்கு லதா மோசமாக சாபம் கொடுத்தார். பிரபு தேவா நயன்தாரா திருமணம் செய்துகொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்த ஜோடி திடீரென பிரிந்தது. என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது.
தற்போது பிரிவு தொடர்பான செய்திகள் வெளியாகி உள்ளது.. பிரபு தேவாவிற்கு முன் நயன்தாரா சிம்புவை காதலித்தி பிரிந்தது அனைவரும் அறிந்ததே. பிரபு தேவா சிம்புவை நயன்தாராவுடன் சேர்த்து தினமும் பேச ஆரம்பித்தாராம். சிம்புவின் பிரியை மறந்து இருந்த நயன்தாரா பிரபு தேவாவிடம் ஆறுதல் கிடைக்கும் என்று நம்பிய போது அதிக வலி கொடுத்தது பிரபு தேவா தானாம். திருமணம் செய்துகொள்ளும் நாளை தீர்மானித்த பின்னரே இருவரும் பிரிந்துள்ளனர்…!!