தாயால் கொடூரமாக அடித்து துன்புறுத்தப் பட்ட குழந்தை பிரதீப் இப்போது எப்படி இருக்கிறது? இதோ வைரலாகும் புகைப்படங்கள்.!
கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் அதிகம் பேசப் பட்டது 2வயதான குழந்தை பிரதீப் தான். வடிவழகன் துளசி தம்பதிகளின் இரண்டாவது குழந்தையான பிரதீப் பெற்ற தாயால் மிக மோசமாக நடத்தப் பட்டிருந்தார். அடித்து வாயை உடைத்து, முதுகு முழுவதும் காயப் படுத்தி என குழந்தையை பார்க்க முடியாத அளவிற்கு துன்புறுத்தி இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போன பலர் தாயாரான துளசியை கைது செய்யும் வரை காத்திருந்தனர். கள்ளக் காதலால் இது போன்ற செயலை செய்ததாகவும், அத்துடன் பிரதீப் வயிற்றில் இருக்கும் போதும், பிறக்கும் போதும் தனக்கு அதிக வலி கொடுத்ததால் குழந்தையை வெறுத்ததாகவும் துளசி கூறி இருந்தார்.
துளசியை விசாரித்த நீதிமன்றம் தற்போது 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளது..இந்த நிலையில் குழந்தை என்ன ஆனது என்பது பலரது கேள்வியாக இருந்தது, தற்போது குழந்தை தனது தாத்தா பாட்டியுடன் இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் குழந்தையை நேரில் சென்று சந்தித்த அமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தையின் மருத்துவ செலவுக்காக 10 ஆயிரம் ரூபா பணமும் குழந்தையின் தாத்தா பாட்டிக்கு கொடுக்கப் பட்டுள்ளது.!!