நடிகை பிரியாமணியின் திருமணம் இனி செல்லாது! திருமணமாகி 4 வருடங்களின் பின் வெளியான உண்மை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!
நடிகை பிரியா மணியின் திருமணம் செல்லுபடியற்றது என பிரியாமணியின் கணவர் முஸ்தபா ராஜின் முதல் மனைவி ஆயிஷா பரபரப்பு பேட்டியளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்த பிரியா மணி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டர்.
திருமணமாகி 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையின் முஸ்தபா ராஜின் முதல் மனைவியான ஆயிஷா கணவர் பிரியமணி இருவரும் செய்துகொண்ட திருமணம் சட்டப் படியானது இல்லை என்றும், முறைப்படி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்றிமெ தெரிவித்துள்ளார்.
2010 ஆண்டு ஆயிஷா முஸ்தபா ராஜ் திருமணம் நடந்த நிலையில் 2013ம் ஆண்டு பிரிந்தனர். அதன் பின் 2017ம் ஆண்டு பிரியா முஸ்தபா ராஜ் திருமணம் நடந்தது, இந்த திருமணம் செல்லுபடி அற்றது என ஆயிஷா தெரிவித்துள்ளதுடன் சாதாரணமாக இருவரும் பேசிப் பிரிந்தோம் முறைப்படி விவாகரத்து ஆகவில்லை, எங்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
குழந்தைகளுக்காகவே இவ்வளவு நாளும் அமைதியாக இருந்தேன், இனி அமைதியாக இருக்க மாட்டேன், குழந்தைகளுக்கு எதிர் காலத்தை கருத்தில் வைத்தே இன்று வெளியே சொன்னேன், சட்ட ரீதியாக கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!