தொகுப்பாளினி பிரியங்காவின் கணவர் பிரவீன் எங்கே.?பிக் பாஸ் நிகழ்ச்சியால் கணவருடன் கருத்து வேறுபாடா.? சோகத்தில் ரசிகர்கள்.!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 5 சீசன்கள் நிறைவடைந்து விட்டது, இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி என பலர் கூறினாலும் போட்டியாளர்கள் யாரும் இது வரை அப்படி கூறியதில்லை, இதனாலோ என்னவோ இந்த நிகழ்ச்சியால் பல குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றது.
அண்மையில் அபினய் மற்றும் அவரது மனைவியிடையே கருத்து வேறுபாடு வர காரணமும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் அவரது கணவர் பிரவீன் இருவருக்கும் இசையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியங்கா மற்றும் பிரவீன் தம்பதி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரியங்கா சென்ற பின் பிரவீன் என்ன ஆனார் என்று தெரியாமல் போனது. பிக் பாஸ் வீட்டிலும் பிரியங்கா பிரவீன் பற்றி பேசவில்லை,பிக் பாஸ் வீட்டிற்குள் பிரியங்காவை பார்க்க பிரவீன் செல்லவில்லை, பிரியங்கா வெளியே வந்தும் பிரவீன் பற்றி பேசவில்லை.
இதனால் பிரியங்கா ப்ரவீன் பிரிந்துவிட்டார்களா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கிடையில் இருந்து வந்தது. நேற்றைய தினம் இதற்கு பதில் அளித்துள்ள பிரியங்கா அடுத்த வீடியோவில் இதற்கான பதில் சொல்கிறேன் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பிரவீன் பிரியங்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என கூறி வருகின்றனர். உண்மை பிரியங்காவிக்கு தான் தெரியும்.!