ஆஸ்திரேலியாவில் அசத்திய தமிழ் மாணவியின் வரலாற்று சாதனை..! கொண்டாடும் தமிழ் மக்கள்..! நீங்களும் வாழ்த்தலாமே..!!
ஒஸ்ரேலியாவில் தமிழ் மாணவி ஒருவர் படைத்த சாதனை அங்கு வாழும் தமிழ்ச் சொந்தங்களால் பெருமையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒஸ்ரேலியா மெல்பேர்ணை வசிப்பிடமாக கொண்ட கெங்காசுதனின் மகளான பிரியங்கா ஒஸ்ரேலியாவின் மேல் நிலைப் பள்ளிகளில் நடத்தப் படுகின்ற VCE உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்றே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சொந்த நாட்டை விட்டு புலம்பெயர் நாடு ஒன்றில் வாழும் தமிழ் பெண்ணான கெங்காசுதன் பிரியங்கா 50 புள்ளிகளில் 50 (50 இற்கு 50) புள்ளி அதாவது முழுமையான மதிப்பெண்கள் எடுத்தே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒஸ்ரேலியாவில் இது வரை நடந்த VCE பரீட்சை வரலாற்றில் தமிழ் மொழி பரீட்சையில் பிரியங்கா மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார். இது வரை எந்த ஒரு தமிழ் மாணவர்களும் செய்யாத சாதனையை பிரியங்கா செய்ததால் வாழ்த்துகள் குவிந்து வருகிறது..!! இவரைப் பாராட்டி உங்கள் வாழ்த்துக்களைப் பகிர்வதுடன், இச் செய்தியை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே.
ஒஸ்ரேலியா: Australia – அவுஸ்திரேலியா, ஆஸ்திரேலியா