ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய “பருத்திவீரன்” பிரியாமணி..! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!!
தமிழ், மலையாளம், ஹிந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் பிரியா மணி. மலையாளத்தில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்ட பிரியாமணியால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்வதற்கு சில காலம் தேவைப்பட்டது.
ஆனால் ஒரே திரைப்படம் பிரியாமணியை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியது. நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த பிரியா மணி ” பருத்திவீரன் ” திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ஏராளமான விருதுகளை அள்ளியது.
அதன் பின் தமிழில் முன்னணி ஹீரோயினாக இருந்த பிரியாமணி வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் மீண்டும் மலையாள பக்கமே சென்று டீவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதன் பின் தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் பிரியாமணியின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது. இருந்ததை விட இன்னும் அழகாகி ரசிகர்களை கவர்கிறார். பிரியாமணியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லை என கொமெண்ட் செய்து வருகின்றனர்..!!