பிரித்தானியாவில் முக்கிய பொறுப்பில் யாழ் இளைஞன். குவியும் வாழ்த்துக்கள்.! நிஷானுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்..!!
எம்மவருக்கான அங்கீகாரம் கிடைத்தால் நிச்சயம் அதனை பகிர்வதிலும் பாராட்டுவதிலும் நாம் என்றும் முன்னிலையில் நிற்போம் . அந்த வகையில் இன்று பிரித்தானியாவில் வசித்து வரும் யாழ்ப்பணத்தை சேர்ந்த கனகராஜ் நிஷான் அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றோம்.
யாழ்ப்பாணத்தில் சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியர் கனகராஜ் அவர்களின் மகனான நிஷான் உயர்தர பரீச்சையில் 4 A சித்திகள் பெற்று பிரிதானியா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு தேர்வானார். அங்கு தனது உயர்கல்வியை முடித்தார்.
அதன் பின் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கிய கனகராஜ் நிஷானுக்கு பிரித்தானியா லெஸ்ரர் யுனிவெர்சிட்டியில் துணைவேந்தராக நியமனம் கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதம் 4ம் திகதி பணியை பொறுப்பேற்கவுள்ள நிஷானுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் தாய் தந்தை இருவரும் ஆசிரியர்களாக இருக்க வாத்தியார் பிள்ளை மக்கு இல்லை என்பதை நிரூபித்து விட்டார் நிஷான். எமது நாட்டிலேயே சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமனம் பெற்றது ஈழத்தமிழர்களான பெருமை பட வேண்டிய விடயம் தான். வாழ்த்துக்கள் கனகராஜ் கிஷான்…!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.