சூப்பர் சிங்கர் சீசன் 7ல் மீண்டும் ஏமாற்றப் பட்ட இலங்கை பெண்..!! டைட்டில் வெற்றி பெற்றது இவர் தான்..!
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட பலர் இன்றளவில் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். சூப்பர் சிங்கர் சீசன் 6ல் கலந்துகொண்டு முதலிடத்தை பெற்றது மக்கள் இசை பாடகர் செந்தில் கணேஷ்.
தற்போது அவர் நடிகராகவும் பாடகராகவும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சூப்பர் சிங்கர் சீசன் 7 ஒளிபரப்பாகி வந்தது. இதில் இறுதி சுற்றுக்கு மூக்குத்தி முருகன், புண்யா, விக்ரம், கெளதம், சாம் நிஷாந்த் ஆகியோர் பைனலுக்கு தேர்வானார்கள்.
இன்று நடந்த பைனலில் விக்ரம் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப் பட்டது. இருப்பினும் விஜய் டிவி முதலிடத்தை மூக்குத்தி முருகனுக்கு வழங்கியது. இரண்டாம் இடத்தை விக்ரம் பெற்றார். மூன்றாவது இடத்தை புண்யா மற்றும் சாம் பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் புண்யா அல்லது விக்ரம் வெற்று பெறுவார் என எதிர்பார்க்கப் பட்ட போதும் அது நடக்கவில்லை. கடந்த சீசன்களில் போல் இம்முறையும் இலங்கையை தமிழ் பெண்ணான புண்யா திறைமையாக பாடிய போதும் அவருக்கு மூன்றாம் இடமே கிடைத்தது என்பது குறிப்பிட தக்கது..