`உத்திரபிரதேச மாநிலத்தில் கணவர் புடவை வாங்கி தரமறுத்தால் புது மனைவி தூக்கு போட்டு தற்கொலை…!!
உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமித் மற்றும் அஞ்சனா ஆகிய இருவருக்கும் கடந்த 13 திகதி அன்று திருமணம் நடைபெற்றது. மேலும் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகிய நிலையில் புதுமணப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் இந்த நிலையில் சனிக்கிழமை அன்று வீட்டில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக தன்னிடம் பழைய புடவைகள் மட்டுமே இருப்பதால் புதிதாக ஒரு புடவை வாங்கி தருமாறு அஞ்சனா கணவனிடம் கேட்டாள். அதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் இதன் காரணமாக இவர்கள் இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அஞ்சனாவின் கணவர் அமித் அங்கு இருந்து சென்றுவிட்டார்.
மேலும் கணவர் புடவை வாங்கி தரமறுத்தால் மன உளைச்சலில் இருந்த அஞ்சனா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் கோபத்தில் வெளியே சென்ற அஞ்சனாவின் கணவர் வீடு திரும்பி வந்தார். அங்கு வந்த அவர் மனைவி அஞ்சனா தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழ ஆரம்பித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்த நிலையில் அமித் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னுடைய மகளை கொலை செய்து விட்டதாக அஞ்சனாவின் தந்தை ஆதார் சிங் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் அஞ்சனாவின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.