மன்னித்துவிடு நண்பா உன் தங்கையை கொலை செய்து விட்டேன் ” திருமணமாகி 6 மாதத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இளைஞர்.! வெளியான காரணம்.!!
நண்பனின் தங்கையை திருமணம் செய்து 6 மாதத்தில் கொலை செய்த இளைஞர் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தன். ட்ரைவராக பணி புரியும் இவர் தனது நீண்ட நாள் நண்பனின் தங்கையான புவனேஷ்வரியை காதலித்து வந்துள்ளார். பின் தனது தாய் தந்தையுடன் சென்று நண்பனிடம் தங்கையை பெண் கேட்டுள்ளார்.
நித்தியானந்தன் மிகவும் நல்லவர் என்பதாலும், தேவையான அளவு சம்பாதிப்பதாலும் பெற்றோரின் விருப்பத்துடன் தங்கையை நண்பனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணமாகி சில மாதங்களில் மனைவியின் நடவடிக்கைகள் நித்தியானத்தனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் புவ்னேஷ்வரி தனது அக்காவின் கணவருடன் அதிக நேரம் போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். பலமுறை நித்தியானந்தன் இதனை நிறுத்தும் படி கூறியும் புவனேஷ்வரி கேட்கவில்லை,
காலை எழுந்ததும், சாப்பிட்டு முடித்ததும், தூங்கும் போது என எல்லா நேரமும் அக்காவின் கணவருடன் பேசுவது சந்தேகத்தை அதிகரித்துள்ளார். அக்காவுடன் பேசு ஆனால் அவர் கணவருடன் பேசுவதை குறைத்துக் கொள் என பலமுறை கூறியபோதும் கேட்காததால் நேற்றைக்கு முன் தினம் சண்டை வந்துள்ளது. சண்டை அதிகரித்ததால் நிலையில் புவனேஷ்வரியை தாக்கிய நித்தியானந்தன் அருகில் இருந்த கத்தியை எடுத்து பலமுறை குத்தியுள்ளார்.
வலி தாக்காமல் கதறி துடித்துக் கொண்டிருக்கும் போது புவனேஷ்வரியின் அண்ணனுக்கு கால் செய்த நித்தியானந்தன் மன்னித்துவிடு நண்பா உன் தங்கையை கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார், நண்பன் வீட்டிற்கு வருவதற்கு முன்பு கிண்டி பொலீஸில் சென்று சரணடைந்துள்ளார் நித்தியானந்தன். நித்தியானந்தனை கைது செய்த பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;