முதல் முதல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு தங்கத்தை சொந்தமாக்கிய பி.வி சிந்து..! பகிர்ந்து உங்கள் வாழ்த்துக்களையும் கூறுங்கள்..!!
உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டண் போட்டிகளில் இரண்டு முறை இறுதி சுற்று வரை சென்று சாம்பியன்ஷிப்பை தவற விட்ட பி.வி. சிந்து வெறிதனமாக விளையாடி முதல் முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை இந்தியாவிற்கு சொந்தமாக்கியுள்ளார். சுவிட்சர்லாந்தின் பா.செல் நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா உட்பட ஏராளமான நாடுகளை சேர்ந்த சிறந்த வீர வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். இதில் ஒற்றையர் பிரிவில் விளையாடிய சிந்து அரையிறுதி போட்டியில் சீனாவை சேர்ந்த வீராங்கனையுடன் விளையாடினார். ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த பி. வி சிந்து சீனா வீராங்கனையை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தேர்வானார்.
பி.வி. சிந்து ஏற்கனவே இரண்டு முறை இறுதி போட்டி வரை வந்து தோல்வி அடைந்ததாலும் சிந்துவுடன் மோதப் போகின்றவர் ஜாப்பான் நாட்டை சேர்ந்த நசோமி ஒகுஹார என்பதாலும் பெரிதாக எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைக்கவில்லை. ஆனால் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல்செட்டை 21க்கு 7 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து கைப்பற்றினார்.
தனது தோல்விகளை வெற்றியாக்க ஆக்ரோசத்துடன் ஆடிய சிந்து, 2வது செட்டையும் 21க்கு 7 என்ற செட் கணக்கில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியானது ஒவ்வொரு இந்தியரும் கொண்டாட் வேண்டிய வெற்றியாக வரலாற்றுப் பதிவானது.
இந்த வெற்றியின் மூலம் வரலாற்றில் உலக சாம்பியன்ஷிப்ஸ் பட்டத்தை கைப்பெற்றி தொடரில் முதல் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெறுமையை பெறுகிறார் பி.வி. சிந்து. இவருக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..!