சாக்குப் பையில் சடலமாக மீட்கப் பட்ட கல்லூரி மாணவி.! அதிரவைத்த உண்மை காரணம்.!!
புதுச்சேரி அடுத்த சந்தை புதுகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ என்ற கல்லூரி மாணவி சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்ரீ தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த நிலையில் பிரதீஷ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ராஜஸ்ரீ அழகு என எப்போதும் வர்ணித்துத் கொண்டிருக்கும் பிரதீஷ் ராஜஸ்ரீ மீது அதிக சந்தேகப் பட்டுள்ளார்.
போன் வெயிடிங் போக கூடாது, உறவினர்களாக இருந்தாலும் ஆண்களின் பைக்கில் போக கூடாது என அதிக கட்டுப் பாடுகள் விதித்துள்ளார். காதலுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ராஜஸ்ரீ பிரதீஷ் மீது அதிக அன்பு காட்டியுள்ளார். இந்த நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் ராஜஸ்ரீயை வீதியில் கண்டு பேசியுள்ளார்.
சாதாரணமாக பேசிவிட்டு ராஜஸ்ரீ வந்த நிலையில் குறித்த இளைஞருடன் ராஜஸ்ரீ பேசியதை பிரதீஷ் பார்த்துள்ளார். பின்னர் ராஜஸ்ரீயுடன் பேசவேண்டும் என கூறி புது குப்பம் பகுதியில் உள்ள மயானத்திற்கு அலைத்துள்ளார். அங்கு வந்த ராஜஸ்ரீயிடம் குறித்த இளைஞர் பற்றி கேட்க கல்லூரி நண்பர் என கூறியதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வந்துள்ளது.
இதனால் கடுப்பான பிரதீஷ் தனது 14 வயது தம்பியுடன் சேர்ந்து ராஜஸ்ரீயை அடித்து கொலை செய்து சாக்குப் பையில் கட்டி போட்டுவிட்டு வந்துள்ளனர். மாயனத்தில் கிடந்த் சாக்கு பையினால் அதிர்ந்த மக்கள் கொடுத்த புகாரின் பெயரில் சடலத்தை மீட்ட பொலீஸார் பிரதீஷை கைது செய்துள்ளனர். சந்தேக புத்தியால் தான் கொலை செய்ததாக ஒத்துக் கொண்டுள்ளார்.!