இன்றைய ராசி பலன் 25.04.2019
இன்றைய ராசி பலன் படிக்க வந்திருக்கும் எம் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம், அனைவரும் நலமா? வாருங்கள் உங்கள் ராசிக்குரிய இன்றைய தினப் பலனை அறிந்து கொள்வோம்.25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் இரவு 08.37 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷராசி நேயர்களே: தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷப ராசி காரர்களே:
செலவுகள் ஏற்படலாம். சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும்.பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
மிதுனராசி காரர்களே:வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது.வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
கடகராசி நேயர்களே:அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது.தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும்.
சிம்மராசி அன்பர்களே:ஆரோக்கிய பாதிப்புகளால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.
கன்னி ராசி காரர்களே:உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.
துலாராசி உறவுகளே:வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். சுபகாரியங்கள் கைகூடும்.
விருச்சிகராசி நேயர்களே: எதிர் பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிறுசிறு மன சங்கடங்கள் ஏற்படலாம். தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
தனுசுராசி அன்பர்களே:திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும்.வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம்.
மகரராசி காரர்களே:பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம்.தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
கும்பராசி உறவுகளே:பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
மீனராசி நேயர்களே:எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.. வி.ஐ.பிக்ளின் நட்பு கிட்டும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”