” என் அண்ணியின் உடல் அழகை பார்” கணவரின் தகாத உறவால் இளம் பெண் மரணம்..!!
தமிழகத்தில் திருமணமான சில மாதங்களிலேயே இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் ஒதியடிகுப்பத்தை சேர்ந்த பொலீஸ் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வரும் அருள் என்பவருக்கு ராஜேஷ்வரி என்ற பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இவர்கள் சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த நிலையில் நேற்றைய தினம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அயலவர் கொடுத்த தகவலின் படி சடலத்தை மீட்ட பொலீஸார் மருத்துவ பரிசோதனை க்காக சடலத்தை வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட ராஜேஸ்வரியின் தம்பியான சரவணன் பட்டினப்பாக்கம் பொலீஸில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதில் அக்காவின் தற்கொலைக்கு காரணம் அக்காவின் கணவர் மற்றும் அவரது அண்ணியாரான வெண்ணிலாவும் தான் என கூறியுள்ளார். இது குறித்து புகாரில் சரவணன் மேலும் கூறியுள்ளதாவது.. எனது அக்கா கடந்த 20ம் திகதி அழைப்பினை ஏற்படுத்தி அழுதுகொண்டே இருந்தார். ஏன் அக்கா அழுகிறாய் என கேட்டேன் அதற்கு அவர் எனக்கு வாழவே பிடிக்கவில்லை.
இங்கு எனது கணவர் அருளும் அவரது அண்ணி வெண்ணிலாவும் என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். நான் அழகில்லை என கூறி கணவர் என்னை அடிக்கிறார்.அத்துடன் வெண்ணிலாவின் ஆபாச புகைப்படங்களை காட்டி என் அண்ணியின் உடல் அழகில் சிறிது கூட உன்னிடம் இல்லை, என் அண்ணியிடம் பணம், அழகு எல்லாம் கொட்டி இருக்கு உன்னிடம் என்ன இருக்கு என திட்டுகிறார் என கூறினார்.
நான் வருவதாக கூறினேன் அதற்கு அவர் வேண்டாம், அம்மா அப்பாவிடம் சொல்லாதே நான் வீட்டுக்கு வந்து மிகுதியை சொல்கிறேன் என்றார். ஆனால் அவர் வரவில்லை. அவரின் தற்கொலை செய்தி தான் வந்தது. அண்ணியுடன் தகாத உறவில் இருந்த அக்காவின் கணவர் அருள் தான் இத்தனை க்கும் காரணம் என அவர் மேலும் புகாரில் தெரிவித்துள்ளார்..!!