கொஞ்சி கொஞ்சி இலங்கை தமிழ் பேசும் நடிகை ரம்பா..! வைரலாகும் வீடியோ..!!
தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப் பட்டவர் நடிகை ரம்பா. துறுதுறு என துள்ளித் திரிந்த இவரை தொடையழகி என ரசிகர்கள் வர்ணித்தனர். திரையுலகில் உச்சத்தில் இருந்த போது கனடாவில் வசித்து வரும் இலங்கை தொழிலதிபரான இந்திரகுமார் என்கிற இந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின் கனடாவில் குடியேறிய ரம்பா இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை வந்தார். பின் விவாகரத்து வரை சென்ற பிரச்சனை இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
அதன் பின் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்து இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று ரம்பாவை பேட்டி கண்டுள்ளது.குறித்த பேட்டியில் கணவர் குழந்தைகள் பற்றி பேசியுள்ள ரம்பாவின் தமிழில் இலங்கை சாயல் அப்படியே இருக்கிறது.