ராமேஸ்வரம் சென்ற ரயிலில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறிய இளைஞன்.! பீதியில் உறைந்த மக்கள்.! பின் நடந்த சம்பவம்..!!
சீனாவில் ஆரம்பித்த கொரொனா வைரஸ் தற்போது உலகில் 25 நாடுகளில் பரவியுள்ளது. இலங்கை, இந்தியா உட்பட சில நாடுகளில் கண்டறியப் பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் தற்போது குணமடைந்து வருகின்றனர். கேரளாவில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் தற்போது முற்றிலும் குணமாகி உள்ளது.
அதே போல் இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட சீனா பெண் ஒருவரும் குணமடைந்துள்ளார். இருப்பினும் மக்களை கவனமாக இருக்கும் படி அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் சீனா இளைஞர் ஒருவர் செய்த செயல் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
நண்பர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்த குறித்த இளைஞன் ஒருவர் எனக்கு கொரோனா என கூறியுள்ளார். நண்பர்களுடன் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்து விட்டு ரெயிலில் பயணம் செய்த மக்களை மிரட்ட தொடங்கி உள்ளார்.
இதனால் மக்கள் பீதியில் உறைந்த நிலையில் சிலர் பொலீஸாருக்கு கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை மீண்டும் சீனாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.