ஜோதிடர் கூறியதால் சிறுவனை தீ வைத்து எரித்த தந்தை.! இந்தியாவை அதிர வைக்கும் கொடூர கொலைகள்.!!
தனது உயிருக்கு ஆபத்து என பயந்து பெற்ற குழந்தையை தீ வைத்து எரித்த தந்தை பற்றிய செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் தன்னிலம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் ராம்கி என்பவரே இவ்வாறு தனது மகனை எரித்துள்ளார். ராம்கிக்கும் காயத்திரி என்ற பெண்ணுக்கும் 6 வருடங்களுக்கு முன்பு திருமணமானது, இவர்களுக்கு சாய் சரண் என்ற மகன் பிறந்துள்ளார்.
குழந்தை வளர தொடங்கிய பின் தான் பெற்றோரால் சாய் சரணுக்கு சரியாக பேச வராது என்பது தெரிய வந்தது. அம்மா, அப்பா, மாமாவை தவிர எதுவும் பேச முடியாது. இதனால் கோபமான ராம்பி ஊனமுற்ற பிள்ளை என கூறி காயத்திரியையும் ராம்கியையும் துன்புறுத்தி வந்துள்ளார். குழந்தையை கணவர் அடிப்பதால் பெரும்பாலும் தனது தங்கை வீட்டிலேயே குழந்தையை வளர்த்து வந்துள்ளார் காயத்திரி.
சாய்சரண் மீது உயிரை வைத்திருந்த காயத்திரியால் கணவன் குழந்தையை அடித்தால் தாங்க முடியாததால் தினமும் சண்டை வந்துள்ளது. இது குறித்து ராம்கி ஜோதிடர் ஒருவரை சந்தித்துள்ளார். ஜோதிடரிடம் இது பற்றி கேட்ட போது போலி ஜோதிடரான குறித்த நபர் சிறுவன் உயிருடன் இருந்தால் ராம்கியின் உயிருக்கு ஆபத்து என கூறியதுடன் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது என்றும், எதை செய்தாலும் தோல்வி மட்டுமே கிடைக்கும் எனவும், வீட்டில் நிம்மதி இருக்காது எனவும் கூறியுள்ளார்.
குழந்தை ராம்சரண் தீய சக்தி எனவும் அந்த தீய சக்தி ராம்கியை அழித்து விடும் எனவும் போலி ஜோதிடர் கூறியுள்ளார். இதனால் பயந்து போன ராம்கி பெப்ரவரி 27 வழமை போல் காயத்திரியுடன் குழந்தைக்காக சண்டை போட்டுள்ளான். பின் திடீரென குழந்தையின் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் பயந்து கதறிய காயத்திரியின் குரல் கேட்டு வந்த அயலவர்கள் சிறுவனை வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளான்..
பொலீஸார் ராம்கியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர், ஜோதிடர் கூறியதால் குழந்தையை கொலை செய்ததாக ராம்கி கூறியுள்ளார்.!!