ஒரு வயது குழந்தையின் திடீர் மரணம்..! ஒட்டுமொத்த மக்களையும் கண்கலங்க வைத்த தந்தையின் புகைப்படம்..!!
இறந்து போன தனது ஒரு வயது குழந்தையின் முகத்தை இறுதியாக காண கிடைக்காத என நடு வீதியில் இருந்து கதறி அழுத தந்தையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி மக்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த புகைப்படம் தொடர்பாக தெரிய வருவதாவது பீகாரை சேர்ந்தவரான ராம்புகார் பண்டித் டெல்லியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் போடப் பட்ட ஊரடங்கு சட்டத்தால் இவரால் பீகார் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியின் இருந்த ராம்புகாரின் ஒரு வயது குழந்தை பீகாரில் உடல் நலக் குறைவால் மரணமடைந்தது. இதனை தொடர்ந்து மனைவி கணவருக்கு அழைப்பினை ஏற்படுத்திய குழந்தையின் மரணத்தை தெரிய படுத்தியுள்ளார்.
இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத ராம்புகார் வீதியிலேயே கதறி அழுத காட்சியை புகைப்பட கலைஞரான அதுல் யாதவ் தனது கேமராக்குள் அடக்கியுள்ளார். இவரது கதறலும் தனது குழந்தையின் முகத்தை இறுதியாக எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற தவிப்பும் பலரது மனங்களை கரைய வைத்ததை தொடர்ந்து.
ராம்புகார் பீகார் செல்ல பல அமைப்புகள் உதவிய நிலையில் இறுதி நொடியில் குழந்தையின் முகத்தை பார்த்துள்ளார் ராம்புகார். பிடிஐ புகைப்பட கலைஞர் அதுல் யாதவின் இந்த புகைப்படம் பலரை கண்கலங்க வைத்து வருகிறது..!!