பிக் பாஸ் போட்டியாளர் ரம்யாவிற்கு குழந்தை பிறந்தது..! அழகிய குழந்தையின் புகைப்படம் இதோ..!!
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில வாரங்களில் வெளியேற்றப் பட்டவர் பாடகி ரம்யா. பிரபல சங்கீத குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த இவர் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொண்டார்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அங்கே போட்டியாளர்களை கவர்ந்ததுடன் ரசிகர்களுக்கு பிடித்தவராக இருந்தார். வெளியே வந்ததும் நடிகர் சத்தியாவை திருமணம் செய்துகெண்டார்.
இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்காத போதும் இருவரின் விருப்பத்திற்காக திருணமனம் செய்து மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த ரம்யாவிற்கு தற்போது குழந்தை கிடைத்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை ரம்யாவின் கணவரான சத்தியா அறிவித்துள்ளார். அத்துடன் குழந்தையுடன் ரம்யா மற்றும் கணவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தைக்கும் ரம்யாவிற்கும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்..!!