பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரம்யா பாண்டியனுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்.! ரம்யாவின் எதிரிகளுக்கு இனி அல்வா தான்.!!
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக கேலி கிண்டலுக்கு ஆளானவர்கள் என்றால் அது ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி தான். இருவரும் சிறந்த போட்டியாளர்களாக இருந்தாலும் பாலாவின் கோபமும் ரம்யாவின் சிரிப்பும் பலருக்கு பிடிக்கவில்லை. ரம்யா பாண்டியன் சினிமா சார்புள்ள குடும்பம் ஒன்றில் இருந்து வந்தால் கூட அவருக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.
இருப்பினும் இவர் நடித்த ஜோக்கர், ஆண் தேவதை திரைப்படங்கள் கொண்டாடப் பட்டது. அதன் பின் புகைப்பட ஷூட் செய்து பிரபலமான இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் ஆனார். ரம்யாவிற்கு திடீரென பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க வீட்டிற்குள் வந்தவர் ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு பிடித்தவராக இருந்தார்.
பின்னர் ஆரியுடன் மோதல் ஏற்பட்டதால் அனைவரும் ரம்யாவை திட்டி தீர்த்தனர்.ரம்யா வெளியே வந்தால் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என நினைத்த நிலையில் அப்படி ஏதும் இல்லாமல் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. தற்போது நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார்.
அறிமுக இயக்குனர் ஒருவர் திரைப்படத்தை இயக்குகிறார், கதை பிடித்துப் போனதால் உடனடியாக ரம்யா சம்மதம் தெரிவித்துள்ளார், அது மட்டும் இன்றி இன்னும் இரண்டு திரைப்பட வாய்ப்புகள் வந்துள்ள நிலையில் ரம்யா கதை கேட்டு வருகிறார்.!!
I'm happy to officially announce my next project with @2D_ENTPVTLTD @rajsekarpandian sir. Special thanks to @Suriya_offl sir and the entire team for this wonderful opportunity pic.twitter.com/TLwgqNMFoU
— Ramya Pandian (@iamramyapandian) January 27, 2021