சோம் சேகருக்கும் ரம்யா பாண்டியனுக்கும் என்ன உறவு? முதல் முறை வீடியோ வெளியிட்டு வெளிப்படையாக பேசிய ரம்யா இதோ வீடியோ.!!
பிக் பாஸ் வீட்டில் காதலர்கள் என்று இந்த சீசனில் யாரும் இருக்கவில்லை, பாலாஜி ஷிவானியை மற்றவர்கள் காதலர்கள் என்ற போது இருவருமே காதல் இல்லை வெறும் நட்பு தான் என்றார்கள், அதே போல் கேபி சோம் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற நிலையில் இதெல்லாம் காதல் இல்லப்பா என்றார்க ள். ஆனால் அமைதியாக ஒருதலை காதலில் இருந்தவர் சோம் சேகர் தான்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து ரம்யா பாண்டியன் மீது கண் சோம் சேகருக்கு, ஆனால் பைனல் நாள் வரை எதுவும் வாய் திறக்க வில்லை. பைனல் அன்று ரம்யா கொடுத்த சக்லட் கவரை 105 நாட்கள் பத்திரப் படுத்தி வைத்து விட்டு பைனல் நாளில் கொடுத்து ரம்யா மீதான அன்பை வெளிப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து வெளியே வந்த சோம் சேகர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் ரம்யாவுடன் சேர்த்து செய்த மீம்ஸ்களை ஸ்டோரியாக போட்டார். அதே போல் ரம்யாவின் தம்பி பரசும் அவர்கள் விருப்பப் பட்டால் திருமணம் செய்யட்டும் என கூறி இருந்தார்.
இது வரை அமைதி காத்துவந்த ரம்யா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சோம் சேகர் பற்றி பேசியுள்ளார். சோம் சேகர் மிகவும் நல்ல மனிதர். சிறந்த போட்டியாளர். அவரை மிகவும் பிடிக்கும், ஆனால் இது காதல் இல்லை. அவர் எனது நல்ல நண்பர். பிக் பாஸ் வீட்டில் எனக்கு பிடித்தவர்களில் சோம் சேகரும் ஒருவர்.
இதனை காதல் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள், அப்படி ஒன்று இருந்தால் கண்டிப்பாக உங்களிடம் சொல்வேன், இப்போதைக்கு சோம் சேகர் எனது மிகவும் நல்ல நண்பர் என கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் நட்பு தான் காதலாகும் என கூறி வருகின்றனர்.!!
That's it. Stay Happy and Ignore Negativities ???
Loving you even more, @iamramyapandian ?
Wonderful Live session ?#RamyaPandian #EngaVeetuPonnu #Gethufans #gethuthalaivi #belikeramya pic.twitter.com/bx3PqrkoxN
— Priscilla Prince (@iampriscyy) January 31, 2021