மகன் அல்லது மகள் உங்கள் ராசியில் பிறந்துள்ளாரா.!? இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன.? தீர்வு என்ன.? இதோ உங்களுக்காக..!
நான் உட்பட பலருக்கு இருக்கும் குழப்பம் தான் ஒரே ராசியில் இரண்டு அல்லது அதற்க்கு அதிகமானோர் ஒரே வீட்டில் இருக்கலாமா என்பது.? தந்தையும் மகனும் தாயும் மகனும் சகோதர்கள் என ஒரு சில வீட்டில் ஒரே ராசியை சேர்ந்தவர்கள் இருப்பதுண்டு. இப்படி இருப்பது நல்லதா கெட்டதா என கேட்டால் எம் முன்னோர்கள் கெட்டது என்றே கூறுகின்றனர்.
ஒரு வீட்டில் இரண்டு ராசிகார்கள் இருந்தால் அஷ்டமத்து அல்லது ஜென்மத்து சனி இருந்தால் அவை முழு குடும்பத்தையும் பாதிக்கும் என்பது எமது முன்னோர்களின் எண்ணம்.அதனால் ஒரே இராசியில் இருவர் இருந்தால் அன்றைய நாட்களில் பிரித்து வைப்பார்களாம்.
இன்றைய காலத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் ஒரு சில வீடுகளில் அதிக பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர். அதற்காகவே இந்த பதிவு. இதில் நம்பிக்கை இருப்பவர்கள் செய்யலாம். ஒரு வீட்டில் இரண்டு ராசிகார்கள் இருக்கும் போது 7 1/2 சனி, அஷ்டமத்து சனி, ஜென்மத்து சனி, இதில் ஏதேனும் ஒன்று வந்தால் நவகிரக வழி பாடு செய்வது அவசியமாகிறது.
முடிந்தவர்கள் எள் தீபம் ஏற்றி வணங்குவது உடனடி நன்மை கிடைக்க உதவுகிறது. தொடர்ந்து 27 சனி கிழமை இதனை செய்வது அவசியமாகிறது. அதே போல் அருகில் இருக்கும் சிவன் கோயில், பிள்ளையார் கோயில் வாழிபாடு செய்து வரலாம்.அல்லது இருவரில் ஒருவர் வெளி நாடு செல்லலாம். பிரிந்து இருப்பது சனி பார்வையால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்கலாம்.!