இன்றைய ராசி பலன்! 10.01.2020
இன்றைய பஞ்சாங்கம்:10-01-2020, மார்கழி 25, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 12.51 வரை பின்பு தேய்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் பகல் 02.48 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. ஆருத்ரா தரிசனம்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:
பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும்.தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.
ரிஷப ராசி அன்பர்களே:
சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.பழையபிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
மிதுன ராசி காரர்களே:
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் பேச்சில் பொறுமை அவசியம். உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம்.
கடக ராசி நேயர்களே:
:சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:
வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் சிலருக்கு ஆதாயம் உண்டாகும். சிலருக்கு திடீர் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.உத்தி யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:
முக்கிய பிரமுகர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.மற்ற மொழியினரால் ஆதாயம் உண்டாகும்.எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
துலாராசி உறவுகளே:
வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.. உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.
விருச்சிக ராசி நேயர்களே:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உங்களுடைய பலம் பலவீனம் அறிந்து செயல் படுங்கள். சிலருக்கு எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு,ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும்
தனுசு ராசி அன்பர்களே:
உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
மகர ராசி காரர்களே:
பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள்.வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.மற்றவர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது,வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்து லாபம் பெறுவீர்கள்.கடன்கள் வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.
கும்ப ராசி உறவுகளே:
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலுள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே:
சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும்.நட்பு வட்டாரம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மனஉளைச்சல்கள் உண்டாகும்.மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும்.