இன்றைய ராசி பலன்!31.01.2020
இன்றைய பஞ்சாங்கம்: 31-01-2020, தை 17, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி பகல் 03.52 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ரேவதி நட்சத்திரம் மாலை 06.09 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் மாலை 06.09 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:
செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
ரிஷப ராசி அன்பர்களே:
காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் முடி வதில் தாமதம் ஏற்படும்.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மிதுன ராசி காரர்களே:
உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.உடல் ஆரோக்கியம் சீராகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.
கடக ராசி நேயர்களே:
வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும்.சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.. பிரபலங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதா யமும் ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே:
சந்திராஷ்டமம் தொடர்வதால் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.உங்களுடைய பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த் தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம்.பொறுமையுடன் இருப்பது பிற்காலத்துக்கு நல்லது.
கன்னி ராசி காரர்களே:
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.உங்களுடைய பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும்.பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
துலாராசி உறவுகளே:
உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
விருச்சிக ராசி நேயர்களே:
உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள்.பழைய கடன் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.
தனுசு ராசி அன்பர்களே:
கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் டென்ஷன் உண்டாகும்.
மகர ராசி காரர்களே:
குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும்.பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தாய்மாமன் வகையில் செலவுகள் ஏற்படும்.
கும்ப ராசி உறவுகளே:
கலகலப்பான சூழல் உருவாகும். வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் புது முதலீடுகளைச் செய்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.நினைத்தது நிறைவேறும்
மீன ராசி நேயர்களே:
திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூலப் பலன் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.உங்களின் அணுகுமுறையை மாற்றுவது நல்லது. கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துவிடவும். சில சூட்சு மங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.