“யாரோ எங்களை அமத்துகிறார்கள், மூச்செடுக்க முடியவில்லை, தொலைபேசியில் அழுத தாய். கனடாவில் இருந்து கண்ணீர் விட்ட மகன்.!! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்.!!
கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு இந்தியாவில் தாய் தந்தை அவஸ்தை படும் நிலையில் கனடாவில் கண்ணீருடன் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மகன் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது. கனடாவில் தாதியாக பணி புரிபவர் ரவின் முருகன். இவர் வேலைக்காக கனடா சென்ற நிலையில் அங்கு பணிபுரிந்து வருகிறார். உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்துவிட்டதால் சில நாடுகள் இந்தியாவிற்கான பயணத் தடையை விதித்தது, இதில் கனடாவும் ஒன்று.
என்ன நடந்தாலும் நாட்டுக்கு செல்ல முடியாது என்ற நினையில் திடீரென ரவினின் தாயிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் மூச்சு எடுக்க முடியவில்லை, யாரோ ஒருவர் எம் மீது ஏறி அமர்ந்திருப்பது போல் உள்ளது, நானும் தந்தையும் அவஸ்தை படுகிறோம் என கண்ணீர் விட்ட தாயால் பதறிப் போனார் ரவின். உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லும் படி கூறியதை தொடர்ந்து உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் இருந்து அழைப்பை ஏற்படுத்திய தாய் தந்தைக்கும் தனக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்ததால் செய்வதறியாது திகைத்துப் போனார் ரவின் முருகன். தாய் தந்தையை பார்க்கவோ, அவர்களுக்கு உதவ முடியாமல் கதறி அழுதுள்ளார். அடுத்து என்ன செய்வதென தெரியாமல் கண்ணீர் வடித்தவருக்கு கனேடிய நண்பர்கள் உதவிக் கரம் நீட்டியுள்ளனர். வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு மருத்துவ செலவுக்காக சுமார் 1000 டொலர்கள் கொடுத்துள்ளனர்.
தாய் தந்தை இருவருக்கும் சிகிச்சை இடம்பெற்று வரும் நிலையில் தந்தையின் நுரையீரல் 15%வீதம் முழுமையாக சேதமடைந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக் தெரிவித்துள்ளனர். மனதை தேற்றிக் கொண்டு பணிபிரிந்தாலும் தாய் தந்தை தனித்து விடப் பட்டுள்ள நிலையில் என்னால் என்னை பெற்றவர்களுக்கு உதவ முடியவில்லை என்பது கொடுமை என தெரிவித்துள்ளார்.!!