இன்னும் 8 நாட்களில் திருமணம் நடக்க விருந்த நிலையில் பெண்ணொருவர் ரயில் மோதி பலி..!!!
விழுப்புரத்தின் சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்த ஜான்சிராணி என்ற இளம் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி திருமணம் நிச்சயமிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலையில் வேலைக்கு போவதற்காக வீட்டிலிருந்து வெளிக்கிட்ட ஜான்சி ராணி, வீதியில் உள்ள சென்னை மற்றும் திருச்சி ரயில் கடவையை செல்போனில் பேசிக்கொண்டே கடக்க முயன்றார். அந்த நேரத்தில் குறித்த ரயில் பாதை வழியாக வந்த அதிவிரைவு ரயில் ஜான்சிராணி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
திருமணமாவதற்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில் செல்போன் ஜான்சிராணிக்கு எமனாக வந்து அவரின் உயிரை காவு வங்கியுள்ளதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர் மனவேதனையில் துடித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.