நடிகை ரெஜினாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..!! மாப்பிள்ளை யார்..?
தமிழ் திரையுலகை பொறுத்த வரை இரண்டு விதமான நடிகைகள் இருப்பார்கள். ஒன்று திரைப்பட வாய்ப்புகள் இல்லாவிட்டால் திருமணம் செய்துகொள்பவர்கள். டாப் ஹீரோயினாக இருக்கும் போது திருமணம் செய்து கொள்பவர்கள். இதில் நடிகை ரெஜினா முதலாவது வகை என்று கூறப் படுகின்றது.
சென்னை பெண்ணான ரஜினா கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் தெலுங்கு திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய ரெஜினாவிற்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நடித்தார். ஆனாலும் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை.
செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை,வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி இரண்டு திரைப்படங்கள் நடித்து முடித்தும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் ரெஜினாவிற்கு திடீர் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாம்.
எவ்வளவு திரைப்படத்தில் நடித்தும் வெற்றிபெற முடியவில்லை என புலம்பிக் கொண்டிருந்த ரெஜினா திருமணத்திற்கு சம்மதித்துவிட நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாம்.13ம் தேதி ரகசியமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒப்புக் கொண்ட படங்களில் நடித்து முடித்து விட்டு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார் ரெஜினா என்று கூறப்படுகிறது.இது பற்றி செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ரெஜினா இந்த விடயத்தை மறுக்கவில்லை.
அதே நேரம் நிச்சயதார்த்தம் பற்றி எதுவும் கூறவும் இல்லை இது உண்மையா என்பதை அவரே கூற வேண்டும். அப்படியானால் யார் அந்த அதிர்ஷ்டசாலி மாப்பிள்ளை. ? ரெஜினா சினிமாவில் யாருடனும் கிசுகிசு அல்லது சர்ச்சையில் மாட்டுப் படவில்லை என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.!!