ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு, திட்டமிட்டு இளம் பெண் செய்த மோசமான செயல்..! சென்னையில் நடந்த கொடூர சம்பவம்..!!
ஆண் குழந்தைக்கு ஆசை பட்ட கணவர் குடும்பத்தினரால் இளம் பெண் செய்த மோசமான செயற்பாடுகள் வைரலாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாம்பழத்தை சேர்ந்தவர் ரேவதி. 27 வயதாகும் இவருக்கு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது.ரேவதி திருமணத்திற்கு முன்பு நர்சிங் படித்து வந்த நிலையில் பணக் கஷ்டம் ஏற்பட படிப்பை முடிக்காமல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு தொடர்ந்து பெண் குழந்தைகள் இரண்டு பிறந்தது. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் ஆண் குழந்தை வேண்டும் என்று தொல்லை கொடுத்த நிலையில் கர்ப்பமாக இருந்த ரேவதிக்கு மீண்டும் பெண் குழந்தை தான் என கணவர் வீட்டினர் கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருந்த ரேவதி தாய் வீட்டில் சென்று வாழ்ந்தார்.
அடுத்து பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வது என யோசித்த ரேவதி தாயுடன் சேர்ந்து குழந்தையை கலைத்துள்ளார்.ஆனால் குழந்தை வயிற்றில் இருப்பது போல் துணி வைத்து நாடகமாடியுள்ளார். பின் ஆண் குழந்தை தேடி அலைந்துள்ளார். இதன் போது மீரினா பீச்சில் பலூன், பாசி மணி விற்பனை செய்யும் தம்பதியினரின் புதிதாக பிறந்த குழந்தை கண்ணில் பட குழந்தையை கடத்த திட்டம் போட்டுள்ளார்.
அவர்களுடன் நெறுங்கி பழகிய ரேவதி குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆசை காட்டி குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். ஆனால் தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் 2மாத குழந்தை புட்டி பால் குடித்து நோய்வாய்ப்பட்டது. இதனால் அருகில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்ற ரேவதி குழந்தை எதுவும் குடிப்பது இல்லை என அட்மிட் ஆகியுள்ளார்.
அதே நேரம் கணவருக்கு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் வைத்தியசாலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். குழந்தையை வந்து கணவர் பார்த்துவிட்டு குழந்தை பெரிதாக இருக்கிறதே என கூற அதிக எடையுடன் பிறந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் பத்திரிகைகளில் குழந்தையை காணவில்லை என பொலீஸார் விளம்பரம் கொடுக்க பயந்து போய் சுத்தி திரிந்த ரேவதி மேல் சந்தேகம் ஏற்பட நர்ஸ் ஒருவர் பொலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பொலீஸார் வந்து விசாரணை செய்த போது மாட்டிக் கொண்டார். அத்துடன் குழந்தையின் தாயிடம் சென்ற குழந்தை ஹிந்தியில் பேசுவதை மட்டுமே புரிந்துகொள்வது போல் சிரித்துள்ளது. குழந்தையின் பெற்றோர் பொலீசஸாருக்கு நன்றி கூறியுள்ளனர். தற்போது ரேவதி மற்றும் அவரது தாயார் இருவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்..!