“என்னை 13 பேர் பாலியல் தொல்லை செய்தனர்” இவர்கள் என்னை கற்பழித்தார்கள்.! சுமார் 13 திரை பிரபலங்களின் பெயரை அதிரடியாக வெளியிட்ட ரேவதி சம்பத்.! அதிரும் திரைத் துறை.!!
13 பேரால் பாலியல் தொல்லை அனுபவித்ததாக நடிகை ரேவதி சம்பத் கூறி இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக பல நடிக நடிகைகள் கூறிவந்த நிலையில் மீ 2 அமைப்பை ஆரம்பித்து பாலியல் தொல்லைகளால் பாதிக்கப் படுபவர்கள் தொல்லை கொடுத்தவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டி வந்தனர்.
பாடகி சின்மயி, பார்வதி ஸ்ரீரெட்டி, பல நடிகைகள் வெளிப்படையாகவே பேசினார்கள். இது ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பத்மஷேசாத்திரி பள்ளி ஆசிரியர்கள் சிலரால் மாணவிகள் பாலியல் வன்கொடுமை அனுபவித்த விடயம் தொடர்பாக பேசப் பட்டுக் கொண்டிருப்பதுடன் விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகை ரேவதி சம்பத் தான் 13 பேரால் பாலியல் வன்கொடுமை அனுபவித்ததாக தெரிவித்ததுடன் அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார். இயக்குனர் ராஜேஷ் தொச்சிவர். நடிகர் சித்திக், ஒளிப்பதிவாளர் ஆஷிக் மஹி, நடிகர் சிஜூ, கேரளா பேஷன் லீக் அம்ஹில் தேவ், டாக்டர் அஜய் பிரபாகர், 7. எம்.எஸ்.பதுஷ், சவுர கிருஷ்ணா, நந்து அசோகன், குறுப்பட இயக்குனர் ஜோஸ், விளம்பர் பட இயக்குனர் ஷனூப் கர்வத்,
ரஹீந்த் பாய், இவர்களுடன் வங்கி ஏஜெண்ட் சருன் லியோ மற்றும் இன்ஸ்பெக்டர் பினு ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ள அவர் நந்து அசோகன், மற்றும் பாதுஷ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து தனது கற்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், சவுரவ் கிருஷ்ணா இணையத்தில் தன்னை பற்றி தவறாக பேசி பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறியுள்ளார். இவரது லிஸ்டை பார்த்த பலர் போதும் போதும் லிஸ்ட் பெருஷா இருக்கே இது நிஜம் என்றால் ஆதாரத்துடன் புகார் கொடுங்கள் என கூறி வருகின்றனர்.!!