அரிசி கழுவிய நீரை என்ன செய்வீர்கள்..!? இனி இப்படி செய்து பாருங்க…!!
நாம் பாவிக்கும் அரிசியில் பல நன்மைகள் உள்ளது. அதிலும் நாம் அரிசியை கழுவும் போது, அதில் உள்ள தண்ணீர் நம் அழகை பாதுகாக்கும் சக்தி உள்ளது.இதில் விட்டமின், மினரல்ஜ், அமினோஆசிட், உள்ளது. இது முகத்தில் பருக்களை வரவிடாமல் தடுக்கும்
இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.நாம் பேசியல் செய்வதற்கு கிளின்சர் பயன்படுத்துவது உண்டு. கிளின்சராக இந்த அரிசி கழுவிய நீரை பயன்படுத்தலாம். இதை துணியில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால், அதன் சத்துக்கள் சருமத்தில் வந்து விடும்.
நாம் குடிக்கும் போது ஊறவைத்த நீரை விட, அரிசியை வேக வைத்து, அதை வடிகட்டி அதோடு உப்பு சேர்தது குடிக்கும் போது சத்துக்கள் உடலில் வந்து சேரும்.குழந்தைகள் சீக்கிரம் நடக்க, அரிசி கழுவிய நீரை சுடவைத்து, இதில் கால்களை பிடிக்க வேண்டும். இதனால் கால்களுக்கு வலு கிடைத்து, குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும்.