முற்றிலும் அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல தமிழ் திரைப்பட நடிகை..! வெள்ளைகார பையனுடன் திருமணம்…புகைப்படம் இணைப்பு..!
தமிழ் திரைப்படங்களில் தலைகாட்டும் நடிகைகள் எத்தனை நாளைக்கு நிலைத்திருப்பார்கள் என்பது அவர்களின் திறமையை பொறுத்து இருக்கிறது. திறமை எப்படி இருந்தாலும் அதிர்ஷடமும் சிறிதளவு இருக்கவே வேண்டும்.
அப்படி இரண்டு திரைப்படங்கள் நடித்து இரண்டுமே சூப்பர் ஆன பிறகும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனவர் தான் நடிகை ரிச்சா. சிம்புவுடன் ஒஸ்தி திரைப்படத்தில் நடித்த இவரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப் பட்டது.
அதே போல் மயக்கம் என்ன திரைப்படத்தில் இவரின் நடிப்பை பார்த்து பலர் கண் கலங்கினார்கள். ஆனால் என்ன சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. படித்து வேலை என இருந்தா ரிச்சா தனது நீண்ட நாள் காதலனான ஜோ லிக்கலோ என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இது ரகசிய நிச்சயதார்த்தமாக அமைந்துள்ளது. தற்போது அது பற்றி பேசியுள்ள ரிச்சா…நானும் ஜோ லிக்கலோ நீண்ட நாட்கள் காதலித்து வந்தோம். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டோம். இந்த வருட இறுதியில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். நிச்சயம் திருமணம் ரகசியமானதாக இருக்காது என தெரிவித்துள்ளார்..!