வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்..! நபர் செய்த கொடூர செயல்..!!
சகோதரியுடன் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் Rida Masroor. இவர் திருமணமாகி சில மாதங்கள் கூட ஆகாத நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதன் பின் குடும்பத்தினருடன் வசித்து வந்த Rida வேலைக்காக தனி அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் தனது சகோதரிக்கு வீடியோ அழைப்பை ஏற்படுத்தி பேசிக் கொண்டிருந்தார். அதன் போது திடீரென அழைப்பு துண்டிக்கப் பட்டது. பேசும் போது பின்னால் ஒருவர் வந்தது போல் இருந்ததை பார்த்ததால் சந்தேகப் பட்ட சகோதரி குடும்பத்தினருடன் Ridaவின் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு Rida சடலமாக கிடந்ததை தொடர்ந்து உடனடியாக பொலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் பொலீஸார் விசாரணை செய்த போது Rida விவாகரத்தான பின் ஹபி என்ற நபரை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. திருமணமாகவில்லை என கூறிய ஹபி Ridaவை திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார்.
ஆனால் சில மாதங்களின் பின் ஹபிக்கு திருமணமாகி மனைவி இருப்பது Ridaவிற்கு தெரிய வர மனைவியுடன் வாழுமாறும் தன்னை விட்டு விடும் படியும் கூறியுள்ளார். இதனால் கோபமான ஹபி இவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. ஹபி தலைமறைவாக உள்ளதால் பொலீஸார் அவரை தேடி வருகின்றனர்.!!