” பிக் பாஸ் வீட்டிற்குள் உன்னை அனுப்பியது என் தவறு தான் ” ரியோவின் மனைவி ஸ்ருதி பேட்டி.! சோகத்தில் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களின் எதிர்ப்பை அதிகம் சம்பாதித்து வருபவர் ரியோ ராஜ். பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்து பின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்த ரியோ அதன் பின் சில திரைப்படங்களில் ஒப்பந்தமானார்..
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக சூட்டிங் நிறுத்தப் பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த ரியோவிற்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். ஆரம்பத்தில் ரியோ, ரசிகர்களுக்கு பிடித்தவராக இருந்தார். ஆனால் சில நாட்கள் கடந்த பின் ரியோ ஓவர் ஆக்ட் செய்ய தொடங்கினார்.
அத்துடன் அர்ச்சனா, ரியோ, நிஷா, வேல்முருகன் ஆகியோர் குரூப்பாக இணைந்து மற்றவர்களை அடிமையாக்க முயற்சி செய்து வருகின்றனர். இதனால் ரியோவின் ரசிகர்களே ரியோவை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் ரியோவின் மனைவியான ஸ்ருதி பிரபல சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் “ரியோவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பொ இருக்க கூடாது என்று நினைக்கிறேன், ரியோ பிக் பாஸ் வீடு உனக்கானது அல்ல, நீ நீயாக இருப்பாய் என்றே அனுப்பினோம், ஆனால் நீ யாரோவாகி இருக்கிறாய்,நீ சீக்கிரம் வந்துவிடு, இதனால் நீ எடுத்த நல்ல பெயர் கெட்டுப் போகிறது வந்துவிடு என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நல்லதே நடக்கும் என கூறி வருகின்றனர்.!