நடிகர் சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் இவர் தான் என பிரபல நடிகை மீது வழக்கும் பதிவு.! அதிர்ச்சியில் திரையுலகம்..!!
நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது முன்னாள் காதலி ரியா மீது ஐபிசி 306, மற்றும் 420 போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விடயம் சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுஷாந்தின் மரணம் குறித்து ரியாவிடம் சுமார் 8 மணி நேர விசாரணை இடம்பெற்றது. இதன் போது தனக்கும் சுஷாந்திற்குமான உறவு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக முடிந்துவிட்டதாக ரியா ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் ரியா சுஷாந்தை பொருளாதார மற்றும் மன ரீதியாக தொல்லை கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சுஷாந்தின் நீண்ட நாள் ரசிகர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
சுஷாந்தின் மரணத்திற்கு முழுமையான காரணம் ரியா என புகாரில் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலீஸார் வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்..!!