துணை முதலமைச்சர் பதவி வழங்காது நடிகை ரோஜா ஏமாற்றப் பட்டது இதற்காக தானா.? வெளியான தகவல்..!
ஆந்திரா பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு மிகப் பெரிய வெற்றி பெற்றவர் நடிகை ரோஜா. நகரி தொகுதியில் எம் எல் ஏ வாக இருக்கும் ரோஜா தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவி வருவதால் மக்கள் ரோஜா மீதான அதிக நம்பிக்கையுடன் வாக்களித்தனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக நேற்றைய தினம் பதவியேற்றார். துணை முதல்வராக ஐந்து பேர் தேர்வு செய்தப் பட்டது. ஐந்து பேரில் துணைமுதல்வராக நடிகை ரோஜாவும் இருப்பார் என எதிர்ப்பார்க்கப் பட்டது.
காரணம் மற்றவர்களை விட ரோஜா ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கம், ஆரம்பத்தில் இருந்து அண்ணா தங்கை என்றே அழைத்துக் கொள்வார்கள், அத்துடன் கட்சியின் வெற்றிக்காக அதிகம் பாடுபட்டவர் நடிகை ரோஜா. அதனால் துணை முதலமைச்சர் நிச்சயம் ரோஜா என்று கூறப்பட்டது.
இவற்றை நொடியில் உடைத்து எரிந்த ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவிற்கு அமைச்சர் பதவியை கூட கொடுக்கவில்லை. இதனால் ரோஜாவின் ஆதரவாளர்கள் கவலையில் உள்ள நிலையில் தற்போது ஒரு செய்து கசிந்துள்ளது.
ரோஜாவிற்கு பதவி கொடுக்காதத்திற்கு காரணம் சபா நாயகர் பதவி வழங்கிவதற்காகவாம். சபா நாயகர் பதவி வெற்றிடமாக உள்ளதால் ஜெகன் மோகன் ரெட்டி இதனை செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
இதுவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ரோஜா ஏமாற்றப் பட்டால் அது ஜெகன் மோகன் ரெட்டிக்கு மக்கள் ஆதரவு குறைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது..!/