அரசியலில் ரோஜாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்..! மாதாந்தம் எவ்வளவு கிடைக்க போகிறது தெரியுமா.? இத பாருங்கள்…!!
நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் கொண்டாடப் படும் நடிகைகளில் ஒருவர். 90 களில் தனக்கான தனி இடத்தை பிடித்திருந்த ரோஜா அரசியல் மீதான ஈர்ப்பால் அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால் அவரது முதல் அரசியல் பிரவேசம் தோல்வியை சந்திக்க அவர் நம்பி சென்ற கட்சியில் அவருக்கான மரியாதை இருக்கவில்லை,
இதனால் கட்சியை விட்டு வெளியேறி ஒய் எஸ் ஆர் கட்சியில் சேர்ந்து கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிடித்தமான பெண்ணாக இருந்தார். ஜெகன் மோகனை அண்ணா என்றழைத்ததால் தனது சொந்த தங்கையை போல் ரோஜாவை பார்த்த ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் நகரி தொகுதியில் வேட்பாளர் ஆக்கினார்.
இரண்டு முறை குறித்த தொகுதியில் போட்டியிட்ட ரோஜா இரண்டு முறையும் வெற்று பெற்றார். இருப்பினும் ரோஜாவிற்கு அமைச்சில் பதவிகள் வழங்கப் படவில்லை. இதனால் ரோஜாவின் ஆதரவாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் ஆந்திராவின் ஆளும் கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் கட்சியின் ” ஆந்திரா மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவியை ரோஜாவிற்கு வழங்கியுள்ளது.
இதனால் ரோஜாவின் மாத சம்பளம் 2 லட்சம் போக வாகனத்திற்காக 60 ஆயிரம், தனிப்பட்ட சலுகை 70 ஆயிரம், தங்குமிடத்திற்கு 50 ஆயிரம், மொபைல் கட்டணம் 2 ஆயிரம் வழங்கப் படுகிறது. மொத்தமாக இனி ரோஜாவிற்கு 3.82 லட்சம் ரூபாய் மாதாந்தம் கிடைக்கும். அத்துடன் இந்த பதவி அமைச்சர் ஒருவருக்கு நிகரான பதவி என்பது குறிப்பிட தக்கது…!!