காதலித்து நிச்சயதார்த்தமும் முடிந்த நிலையில்…ரோஜா சீரியல் நடிகையை விட்டு ஓடிய அவரது காதலன்..! நின்று போன திருமணம். காரணம் இது தானாம்..!!
தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கே மதிப்பு அதிகம். சீரியல்கள் பெண்களை ஆட்சி செய்கிறது என்று கூட சொல்லலாம். அதனால் சீரியல் நடிக நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர். அதில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகையும் ஒருவர்.
ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்காவிற்கு ராகுல் என்பவருடன் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. ராகுலும் சினிமா துறையில் இருந்ததால் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் ராகுல் மலேசியா வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின் போன் நம்பர் உட்பட அனைத்து தொடர்புகளையும் நிறுத்தியுள்ளார். பல முறை முயற்சித்த பின் நண்பர் ஒருவரின் மூலம் மொபைல் நம்பர் பெற்றுக் கொண்ட பிரியங்கா அழைப்பினை ஏற்படுத்தி பேசிய போது
இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தான் மலேசியா வந்ததாகவும் இனி அழைப்பினை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கூறியதை தொடர்ந்து தங்கள் உறவு முடிந்து விட்டதாக பிரியங்கா தெரிவித்துள்ளார்..!!