தனது திருமணம் தொடர்பில் அதிரடி முடிவு எடுத்த சாய் பல்லவி..! அதிர்ச்சியில் சாய் பல்லவி ரசிகர்கள்..!!
நடன நிகழ்ச்சியின் மூலம் தொலைகாட்சிக்கு அறிமுகமாகி தமிழ், மலையாளம் என முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற ஒற்றை கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டது.
மலையாளத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் நஷ்டம் இன்றி ஓடியது. தமிழில் சாய் பல்லவி நடித்த திரைப்படங்கள் பெரிய ஹிட் கொடுக்காவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படவில்லை. இதனால் இன்றளவும் சாய் பல்லவிக்கு திரை துறையில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் சாய் பல்லவியின் திருமணம் பற்றிய செய்திகள் வெளியாகி வந்தது. இது தொடர்பாக சாய் பல்லவியிடம் பிரபல ஊடகம் பேட்டி கண்டது. திருமணம் பற்றி பேசி உள்ள சாய் பல்லவி எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. என் தாய் தந்தை மீது நான் அதிக பாசம் வைத்துள்ளேன்.
என அம்மா அப்பா எனக்காக ஏராளமான விடயங்களை செய்துள்ளார்கள். திருமணம் எனும் பெயரால் அவர்களை பிரிய விருப்பம் இல்லை. அதனால் திருமணம் வேண்டாம். திருமணம் பற்றிய எந்த கிசுகிசுக்களும் வேண்டாம். நான் திருமணம் செய்யவே மாட்டேன் என தெரிவித்துள்ளார்..!!