தீமைகளை விரட்டி நன்மைகளை மட்டும் அள்ளித் தரும் சாய் பாபா விரதம் இருப்பது எப்படி.? எத்தனை வியாழன் இருக்க வேண்டும்.? இதோ முழு விபரம்..”ஓம் சாய் ராம் “..!!
சாய்பாபா இந்த பெயரை உச்சரிக்கும் போதே மனதில் ஆனந்தம் பிறந்துவிடுகிறது. மதம் இனம் கடந்து கொண்டாடப் படும் சாய்பாபா அவர்கள் கருணைக் கடல் ஆவார். ஓம் சாய் ராம் என்ற வார்த்தை உள்ளத்திற்கு அத்தனை அமைதியை தரக் கூடியது. சாய் நாதனை எப்படி வணங்க வேண்டும்.? சாய் நாதன் அருளை முழுமையாக பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சாய் பாபுவிற்கு வியாழன் கிழமை என்பது மிகவும் பிடித்த நாளாகும். வியாழன் அன்று சாய் பாபாவை வணங்கினால் எம்மை சூழ்ந்த தீமைகள் எல்லாம் தொலைந்து போய் விடும். 9 வியாழக் கிழமை தொடர்ந்து சாய் பாபா விரதம் இருந்தால் சாய் நாதன் உங்கள் அத்தனை நல்ல வேண்டுதல்களையும் நிறைவேற்றிவிடுவார் என்பது ஐதீகம்.
இந்த விரதம் பிடிப்பவர்கள் காலையில் குளித்துவிட்டு சாய்பாபாவை 108 முறை “ஓம் சாய் ராம்” என்ற சாய் மந்திரம் மற்றும் சாய்பாபா பஜனை செய்யலாம். முடிந்ததும் பால், பழங்கள், அல்லது டீ கூட குடிக்கலாம். பகல் நேரத்தில் ஏதேனும் பழம் மற்றும் பால் குடிக்கலாம்,மாலை சாய் பாபா மந்திரத்துடன் பூஜை செய்யலாம். மாலையும் பால் பழம் சாப்பிடலாம்.
மூன்று நேரமும் பால் பழம் விருப்பம் இல்லாதவர்கள் ஒரு வேளை உணவுடன் இந்த விரதம் பிடிக்கலாம். ஆனால் முழு நாளும் எந்த காரணத்திற்காகவும் சாய் பாபா விரதம் பட்டினியாக பிடிக்க கூடாது. இந்த விரதத்தை தொடர்ந்து 9 வியாழன் பிடித்து வந்தால் வீட்டில் எந்த ஒரு கெட்ட சத்தியும் நெருங்கவே நெருங்காது. இதனை 9 வியாழன் தொடர்ந்து பிடிக்க முடியாதவர்கள் ஒன்று அல்லது மூன்று வியாழக்கிழமைகள் பிடிக்கலாம்.!!