திருமணத்தின் பின் பெயரை மாற்றிக் கொண்ட சபானா.! என்ன பெயர் தெரியுமா.!?
கடந்த சில நாட்களாக சீரியல் நடிகைகள் தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர். நடிகை ரேஷ்மா நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான மதனை காதலித்து திருமணம் செய்திருந்தார். அதே போல் நடிகை ஸ்ரேயா நடிகர் சித்துவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுடன் நடிகை சபானா நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான சபானா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப் பட்டார். சீரியலின் நாயகனை காதலிப்பதாக கூறப்பட்ட போதும் இருவரும் இல்லை என்றனர்.
அத்துடன் தாங்கள் சகோதர்கள் என்றனர். அதன் பின் சபானா யாரை காதலிக்கிறார் என்று தெரியாமல் இருந்தவர்களுக்கு அண்மையில் தான் ஆர்யனை காதலிப்பது தெரிய வந்தது. ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு தங்கள் காதலை உறுதிப்படுத்திய சபானா ஆர்யன் திடீரென திருமணம் செய்துகொண்டனர்.
இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சாபானா போட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகின்றது. குறித்த பதிவில் ஆர்யன் மீதான காதல் அதிகரித்துள்ளது தெரிகிறது. ஆர்யன் மற்றும் சபானா வெளியே சென்ற நிலையில் சபானா புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
அதில் ஆர்யன் என பதிவிட்டுவிட்டு இனி மிஸஸ் ஆர்யன் தான் இங்கு இருக்கிறார் சபானா இல்லை என குறிப்பிட்டுள்ளார். சபானாவின் இந்த காதலை பார்த்த ரசிகர்கள் திருமணமானதும் பெயரையே மாற்றுமளவு காதலா என கேட்டு வருகின்றனர்.!