பெண் மீது மட்டுமா தவறு உள்ளது, ஆண்கள் தவறு செய்யவில்லையா.!? பிரிவின் பின் சமந்தா கேட்ட கேள்வி.? திருமண முறிவுக்கு யார் காரணம்.?
இது வியாபார உலகம், அனைத்தையும் வியாபார ரீதியாகவே பார்ப்பார்கள்,இவர்களை பற்றி யோசிக்காமல் உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதை பற்றி யோசியுங்கள், அதற்கான செயல்களை மட்டும் செய்யுங்கள் என நடிகை சமந்தாவிற்கு வனிதா கொடுத்த அறிவுரை வைரலாகி வருகின்றது.
சமந்தா மற்றும் நாக சைதன்யா அண்மையில் பிரிவை அறிவித்தனர். அதன் பின் பல விதமான செய்திகள் வெளியானது, அதில் சமந்தா கருகலைப்பு செய்தார் என்றும் சமந்தாவிற்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இதனை பார்த்த சமந்தா ஏன் இப்படி செய்கின்றீர்கள், பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் என கூறினார், அத்துடன் இந்த பிரிவு எனக்கு மிகவும் வேதனையை கொடுத்தது, பிரிந்த பின் பெண்கள் மீது மட்டுமே குற்றம் சொல்கின்றீர்கள், ஆண்கள் மீது குற்றம் இருக்காதா? உங்கள் விமர்சனங்களால் எங்கள் மனம் எவ்வளவு வேதனை படுகிறது தெரியுமா?
ஏற்கனவே மனதளவில் உடைந்து போய் இருக்கிறேன் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கூறி இருந்தார். இதனை பார்த்த வனிதா “இது வியாபார உலகம், அனைத்தையும் வியாபார ரீதியாகவே பார்ப்பார்கள்,இவர்களை பற்றி யோசிக்காமல் உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதை பற்றி யோசியுங்கள்,
அதற்கான செயல்களை மட்டும் செய்யுங்கள், வாழ்வில் பெண்கள் வெற்றி பெறுவற்கு நிறைய போராட வேண்டியுள்ளது, போராடுக்கள் என தெரிவித்துள்ளார்!!