சமையல் செய்யும் போது தயவு செய்து இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்..! படித்து பகிருங்கள்..!
சமைக்க ஆரம்பித்தால் பெண்கள் மிஞ்ச யாரும் இல்லை என்ற நினைப்பில் சமைத்து முடிப்பார்கள். என்ன தான் ஆண்கள் சுவையாக சமைத்தாலும் பெண்ணின் உணவு சுவையே தனி தான் இதனை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். ஆனால் சமையலில் சில முறைகள் அவர்களுக்கே தெரியாது.
இன்று அவற்றை தான் பார்க்கப் போகின்றோம். பொதுவாக உணவு ருசிக்காக கிராம்பு வெள்ளைப் பூண்டு சேர்த்துக் கொள்வோம், ஆனால் வீட்டில் இருக்கும் சிலருக்கு வெள்ளைபூண்டு மற்றும் கராம்பு கடி பட்டால் பிடிக்காது. அதனால் சிறிய துணி துண்டில் இவற்றை போட்டு நன்றாக கட்டி சமையலில் சேருங்கள்.
பின்பு அவற்றை எடுத்து வைத்துவிட்டு உணவு பரிமாறுங்கள், உணவிற்கு சுவையும் உடலுக்கு நலமும் கிடைக்கும். அடுத்தது சிலர் மரக்கறிகளை வேக வைக்கும் போது கொதிக்கும் நீரில் போட்டு வேக வைப்பார்கள். இனி அப்படி செய்யாதீர்கள் நன்றாக கழுவிய காய்கறிகளை குளிந்த நீரில் போட்டு அடுப்பில் வைய்யுங்கள், அது சிறிது சிறிதாக கொதிக்கட்டும்.
அடுத்தது வெங்காயம் வெட்டும் போது முழு வெங்காயத்தையும் வைத்து வெட்டாதீர்கள்.சரி பாதியாக வெட்டிவிட்டு பின்பு வெட்டுங்கள். அடுத்தது உணவு சமைக்கும் போது சிலர் சட்டியை அடுத்தில் வைத்ததுமே எண்ணெய் ஊற்றிவிடுவார்கள் அப்படி உணவு சமைப்பதால் உணவின் சுவை குறைந்துவிடும், அதனால் பாத்திரம் நன்றாக சூடானதும் சமையுங்கள்…என்ன உறவுகளே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா.? அப்படியானால் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!!