நாளை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான், வெளியான தகவல்..!!
அனிதாவா, சுரேஷா இம்முறை வீட்டை விட்டு வெளியேறுவது என அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க பிக் பாஸ் வீட்டை விட்டு பாலாஜி வெளியேற்றப் படலாம் என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சிடைய வைத்துள்ளது, பிக் பாஸ் நான்காவது சீசனில் மூன்றாவது வாரம் சென்றுகொண்டிருக்கின்றது, போட்டியாளர்கள் தற்போது விளையாட ஆரம்பித்துள்ளனர்,
அடிக்கடி சுரேஷ் வம்பிழுத்துக் கொண்டிருந்தார், தற்போது பாலாஜி சண்டை பிடிக்க ஆரம்பித்துள்ளார். ரியோ, அர்ச்சனா, நிஷா மூவரும் ஒன்றாக சேர்ந்து செயற்படுவதாக பாலாஜி அடிக்கடி கூறி வரும் நிலையில் அவர்கள் குருப்பிஸம் செய்வதாக பாலாஜி நம்புகிறார்.
அது பொய் என்றும் சொல்ல முடியாது, இந்த நிலையில் அடிக்கடி அர்ச்சனாவுடன் சண்டை போடும் பாலாஜியை ரசிகர்கள் வெறுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இரண்டாவது இடத்தில் இருந்த பாலாஜி தற்போது கடைசி இடத்தில் இருக்கிறார்.
இதனால் நாளைய தினம் பாலாஜி வெளியேற்றப் பட இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது நாளை மறுநாள் தான் தெரியவரும்.!