சமந்தா ஜிஜியுடனான எனது உறவு முறை தெரிந்தும் நாக சைதன்யா மெளனமாக இருப்பது வேதனையாக உள்ளது, சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜுகல்கர் அதிரடி பேட்டி.!!
எனக்கும் சமந்தா ஜிஜிக்கான உறவு தெரிந்தும் மீடியாக்கள் தவறாக பேசுவதை நாக சைதன்யா அமைதியாக இருப்பது வேதனையாக உள்ளது என சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜுகல்கர் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
காதலித்து திருமணம் செய்து 4 வருடங்கள் வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமந்தா நாக சைதன்யா ஜோடி பிரிவதாக அறிவித்தது. இவர்களின் பிரிவுக்கு காரணம் என சிலர் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்,
அதில் குறிப்பாக சமந்தாவிற்கும் வேறு ஒருவருக்கும் தவறான உறவு என செய்தி வைரலானது ,சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜுகல்கர் அவர்களுக்கும் சமந்தாவிற்கும் தகாத உறவு இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என செய்திகள் வெளியானது. இதனை பார்த்த ப்ரீத்தம் ஜுகல்கர் சமந்தா ஜிஜி என்னை விட பெரியவர். என்னுடன் பிறந்த சகோதரி போன்றவர்.
நான் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை ஜிஜி என்றே கூப்பிடுவேன், ஜிஜி என்றால் அக்கா என்று அர்த்தம். இதனை நாக சைதன்யா வீட்டில் உள்ள அனைவரும் அறிவார்கள். குறிப்பாக நாக சைதன்யா நன்றாக அறிவார். என்னுடன் மிக அன்பாக பழகும் நாக சைதன்யா எங்களை பற்றி தவறான செய்திகள் வரும் போது மெளனம் சாதிப்பது வேதனையாக இருக்கிறது.
சமந்தா ஜிஜி எத்தனை நல்லவர் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும், எனக்கு ராக்கி கட்டும் என் சகோதரியை என்னுடன் சேர்த்து பேசும் போது அனைத்தும் அறிந்த சைத்னயா கணவராக இப்படி இருப்பார் என நான் நினைக்கவில்லை, ஆக குறைந்தது இரு அறிக்கை சரி விட்டு இருக்கலாம். தயவு செய்து நல்ல உறவு முறையை கேவல படுத்தாதீர்கள் என ப்ரீத்தம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார்.!