“இதயம் உடைந்து, கண்ணீர் விட்டு நான் கதறி அழுத இடம் இது தான்” தனது முதல் காதல் பற்றி முதல் முதல் பதிவிட்ட சமந்தா.! எந்த இடம் தெரியுமா இதை பாருங்கள்.!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகை சமந்தா. திருமணத்தின் பின் பல நடிகைகள் காணாமல் போன நிலையில் திருமணத்தின் பின்பும் வாய்ப்புகள் குறையாமல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் அண்மையில் அவர் போட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தா ஏற்கனவே சித்தார்த்தை காதலித்து வந்ததாக கூறப்பட்டது,
இவர்களின் காதல் அஞ்சான் திரைப்படத்தின் பின்னர் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தனது முதல் காதல் பற்றி பதிவிட்டிருப்பது “ஓ அதுவா இது” என ரசிகர்களை கிண்டல் செய்ய வைத்துள்ளது. சென்னை பல்லாவரம் மலை பகுதியை பதிவிட்டுள்ள சமந்தா இந்த இடம் நிறைய நினைவுகளை தந்திருகின்றது.
என் முதல் காதல் இங்கு தான், இதயம் உடைந்ததும் இங்கு தான், கதறி அழுது கண்ணீர் விட்டது இங்கே தான், என் அத்தனை இன்ப துன்பங்களையும் இந்த இடமே தந்தது, மறக்க முடியாத நினைவுகள் என கூறியுள்ளார். என்ன தான் சிரித்து பேசி, மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் வலிகள்.!!