செய்வினை, பில்லி, சூனியம், ஏவலை விரட்ட சாம்பிராணியுடன் இந்த ஒரு பொடியை சேர்த்து புகை பிடியுங்கள்.! தீய சக்திகள் உங்களை நெருங்கவே பயப்படும்.!!
வீட்டில் பில்லி, செய்வினை, சூனியம், ஏவல் இருக்கு என்று பயப்பிடாதவர்கள் யாரும் இல்லை, எதுவும் இல்லாவிட்டால் கூட சின்ன அசம்பாவிதம் நடந்தால் எம் மனம் செய்வினை சூனியமாக இருக்கும் என்று பயந்துவிடும், இப்படி பயப்படும் போது பலவற்றை நாம் இழந்துவிடுகிறோம், குறிப்பாக பணம் அதிக அளவாக செலவு செய்கிறோம், எப்படியாவது பில்லி சூனியத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் எவ்வளவு கடன் வாங்கி என்றாலும் பணத்தை செலவு செய்கிறோம்,
அடுத்து எமது நிம்மதி முற்றிலும் இல்லாமல் போய் விடுகிறது, யார் தான் வீட்டில் செய்வினை சூனியம் என நிம்மதியாக இருப்பார்கள், இன்று நாம் பார்க்கப் போவது அதிக செலவு இல்லாமல் செய்வினை மற்றும் சூனியத்தை விரட்டும் முறையை தான். சாதாரணமாக நாம் சாம்பிராணி போடும் போது இந்த பொடியையும் போட்டாலே எந்த தீய சக்தியும் வீட்டிற்குள் இருக்காது என்பது சித்தர்களின் வாக்காகும்.
ஆனால் இதனை வாரம் 2 அல்லது மூன்று முறை கண்டிப்பாக இந்த புகை பிடிக்க வேண்டும். நாட்டு மருந்து கடைக்கு சென்று, அந்த கடையில் “தேவதாரு பொடி, பூலான் கிழங்கு பொடி, பெரும் கோரை கிழங்கு பொடி, இது மூன்றையும் வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு பெரிய அளவில் செலவு செய்யும் அவசியம் இல்லை..இந்த மூன்று பொடியையும் மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும்..
சாம்பிராணி கட்டி வாங்கி வழமை போல் வைத்துக் கொள்ளுங்கள் வீட்டை கழுவி சுத்தப் படுத்திய பின்னர் சாம்பிராணி போடும் போது அதனுடன் மிக்ஸ் செய்து வைத்திருக்கும் இந்த மிக்ஸ் பொடியையும் சிறிதளவு போடுங்கள், அவ்வளவு தான்.
பெரும் கோரை, கிழங்கு பொடி, தேவதாரு, ஆகியவை சித்தர்களின் பாதுகாப்பு மூலிகைகளாகும், இந்த பொடியின் நறுமணம் பட்டாலே வீட்டில் இருக்கும் ஒட்டுமொத்த தீய சக்திகளும் ஓடியே போய் விடும். என்ன மக்களே இந்த தகவல் பயனுள்ளதாக இருந்ததா.? அப்படியானால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.!