நல்லவர் போல் வெளியே நடித்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் சனம் செய்யும் கேவலமான செயல்கள்.,! Unseen காட்சிகளை பார்த்து கடுப்பில் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான முறையில் சென்றுகொண்டிருக்கின்றது. 16 பேருடன் நிகழ்ச்சி ஆரம்பமானாலும் பின் 17வது போட்டியாளராக அர்ச்சனா கலந்து கொண்டார், தற்போத் 18வது போட்டியாளராக சுசித்ரா கலந்துகொண்டுள்ளார். 18 பேரில் இருந்து இது வரை 2 பேர் வெளியேறி உள்ளனர்.முதல் வாரத்தில் ரேகாவும், மூன்றாவது வாரத்தில் வேல்முருகனும் வெளியேறினார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். இதில் கடந்த சில நாட்களாக தர்சனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டியின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை முதல் ஆளாக சனம் ஷெட்டியை கமல்ஹாசன் காப்பாற்றுவதாக கூறினார். இதனால் சனம் ஷெட்டி தனக்கு வெளியே ஆதரவு இருக்கு என நினைத்துக் கொண்டுள்ளார்.
இதனால் வீட்டிற்குள் அதிக அட்டகாசம் செய்து வருகிறார். நேற்றைய ஜித்தன் ரமேஷுடன் சண்டை இழுத்த சனம், பின் ரம்யா பாண்டியனுடன் சண்டை பிடித்துள்ளார், ரம்யா பாண்டியன் இருக்கும் இடத்தில் குப்பையை போட்டுவிட்டு இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என கிண்டல் செய்கிறார். என்னை பார்த்தால் குப்பை போலவா இருக்கு என கேட்டுவிட்டு ரம்யா சென்று விடுகிறார்.
அதனை தொடர்ந்து இரவில் பேசாமல் செல்லும் பாலாவிற்கு பின்னால் சென்று காலால் அடிக்கிறார். பாலா கண்டுகொள்ளாமல் இருந்தாலும் வீணாவ வம்புக்கு இழுத்து சண்டை இடுகிறார். தனக்கு ஆதரவு இருப்பதாக நினைத்து சனம் செய்யும் செயல் கண்டிக்க தக்கது.,!