கண்ணீருடன் காவல் நிலையத்தில் நடிகை சனம் செட்டி..! காரணம் இது தானாம்..!!
தர்சன் சனம் செட்டி பிரச்சனை இன்னும் தீர்ந்த பாடாக இல்லை. தர்சன் விடயத்தில் தர்சனுக்கு பெயில் கொடுக்க முடியாது என கூறப்பட்டுள்ள நிலையில் அவர் பார்ட்டி நண்பர்கள் என ஜாலியாக இருக்கிறார். இந்த நிலையில் சனம் செட்டி மீண்டும் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே கமிஷ்னரிடம் கொடுக்கப் பட்ட புகாருக்கு FIR போடப்படவில்லை, விசாரணை ஆரம்பிக்க வில்லை, புகார் கொடுத்த அடுத்த நிமிடமே நடவடிக்கை எடுப்பதாக கூறிய கமிஷ்னர் இது தொடர்பாக இன்னும் பேசவில்லை, இது தொடர்பாக காவல் நிலையம் சென்றுள்ள சனம் செட்டி தர்சன் சார்ந்தவர்கள் தன்னை கேலி கிண்டல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனை இரண்டொரு நாளில் தானாக முடிந்துவிடும், நீ என்ன தான் செய்தாலும் இனி தர்சன் உன்னை கண்டுகொள்ளவே மாட்டான், சினிமாவில் சாதிக்க தொடங்கி விட்டான் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என தொலைபேசி ஊடாக கேவலமாக திட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொடுக்கப் பட்ட புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை ஆரம்பித்து நடவடிக்கை எடுக்குமாறு சனம் செட்டி கேட்டுல் கொண்டுள்ளார். என்னை ஏமாற்றி எனது உழைப்பில் உயர்ந்துவிட்டு எனக்கு தகாத பட்டம் கொடுத்துவிட்டு தர்சன் செய்த துரோகத்திற்கு நிச்சயம் நீதி வேண்டும் என பொலீஸ் நிலையத்தில் சனம் செட்டி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!!